Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Friday, September 21, 2012

தில்லையம்பதியாள் வரலாறு....


இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களுள் கோண்டாவில் தில்லையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயிலும் ஒன்றாகும். இங்கு குடிகொண்டு கொலுவீற்றிருக்கும் சிவகாமி அம்மையின் அருளாட்சியின் அருளால் இப்பிரதேச வாழ் மக்கள் சிறப்போடும் பெருமையோடும் வாழ்ந்து வருகிறார்கள்.

கோண்டாவில் தில்லையம்பதி பல வளங்களை கொண்டுள்ள ஓர் இடமாகும். நீர் வளம், நில வளம்,கற்பக தருவாக போற்றப்படும் பனை மரங்களும் , தென்னை மரங்களும் , பூத்துக்குலுங்கும் பூஞ்சோலைகளும் , நிறைந்த மருத நில சூழலில் அமைந்துள்ள இவ் ஆலயம் பல ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்றது. பேச்சிஅம்மன் என்னும் திருநாமத்துடன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள். ஆன்மாக்களை உய்வித்தற்பொருட்டே கோண்டாவில் பதியில் திருக்கோவில் கொண்டாள்.யாழ் நகரின் வடபால் மூன்று மைல் தொலைவில் இருக்கும் மாண்பான தெய்வீக மாட்சி நிறைந்த தலமான கோண்டாவில் தில்லையம்பதியில் அன்னை அருளாட்சி புரிகின்றாள்.





அன்னை பராசக்தி 1850ம் ஆண்டுகளுக்கு முன் சுண்ணாம்பு சூளைகள் சூழ மாமர நிழலில் முன்னைய பெரியோர்களால் பராமரிக்க பட்டு வந்தாலும் வேலன் எனும் பெரியவராலேயே அம்பிகையின் ஆலயம் தோற்றம் பெற்றது எனலாம். ஆரம்பகாலத்தில் ஆலயம் ஒரு சிறு துண்டு காணியில் பெரு விருட்சமாக காணப்பட்ட ஒரு மரத்தின் கீழ் ஒரு கல்லை அன்னையின் வடிவாக உருவகப்படுத்தி ஓர் ஓலை கொட்டகையின் கீழ் நான்கு பக்கமும் அரைச்சுவர் வைக்கப்பட்டு கீழ் நிலம் சாணம் கொண்டு மெழுக்கிடப்பட்டு கோயில் முன் வாயில் கிறாதிப் படலை கொண்டு பாதுகாக்கப்பட்டது. கோயிலின் வாசலில் ஓலைக் குட்டானில் விபூதி கிடைக்கப் பெற்றது.