Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Sunday, May 28, 2017

சைவசமய போட்டி பரீட்சை & ஆத்திசூடி மனனபோட்டி - 2017

கோண்டாவில் தில்லையம்பதி அருள் மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயில் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு மத்திய கிராம அபிவிருத்தி சங்கமும் மத்திய சனசமூக நிலையமும் மத்திய கல்வி மேம்பட்டு பேரவையும் கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் அறநெறி பாடசாலையும் மத்திய முன்பள்ளியும் இணைந்து நடாத்தும் சைவசமய போட்டி பரீட்சை & ஆத்திசூடி மனனபோட்டி - 2017

பரீட்சையானது,
ஆண்டு 1- 11வரையான மாணவர்களுக்கு இவ்வாண்டு முதலாம், இரண்டாம் தவணைக்குரிய பாடத்திற்கு அமைவாகவும், ஆலய வரலாறு மற்றும் அம்பிகை தொடர்பான கேள்விகளும் உள்ளடக்கபடும்
பரீட்சை நடைபெறும் இடம்: - யா/ கோண்டவில் பரம்சோதி வித்தியாலயம் 
பரீட்சை நடைபெறும் காலம்: - 03/06/2017 (சனிக்கிழமை)
பரீட்சை நடைபெறும் நேரம்: - காலை- 9.00 மணி

 மனனபோட்டியானது
பாலர் வகுப்பு (முன்பள்ளி) மாணவர்கள் ஆத்திசூடி 1- 20 வரையுள்ள பகுதிகளை மனனம் செய்து நேரில் ஒப்பிக்க வேண்டும். 
இவர்களுக்கன மனன போட்டி 08.06.2017 வியாழக்கிழமை (தேர் திருவிழாஅன்று) மாலை 2.00 மணிக்கு சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறும்.

பரீட்சையில் வெற்றியிட்டும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா 10.06.2017 சனிக்கிழமை (பூங்காவனத்திருவிழா) அன்று மாலை 7.30 மணியளவில் ஆலய முன்றலில் நடைபெறும்.
பரீட்சைக்கான விண்ணப்ப படிவத்தை மத்திய கிராம அபிவிருத்தி சங்க செயலாளரிடம் பெற்று அதனை பூர்த்தி செய்து 02.06.2017 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஒப்படைக்கவும்.
நன்றி...