Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Thursday, May 19, 2016

கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் - பத்தாம் திருவிழா (சப்பறம்)

கோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழாவின் 10ம் நாள் உற்சவம் காலை 8.30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகியது தொடர்ந்து 9.30 மணிக்கு மூலஸ்தான பூசை , 10.00 மணிக்கு ஸ்தம்ப பூசை, 10.30 மணிக்கு வசந்தமண்டப பூசை,11.30 மணிக்கு அம்பாள் வீதி உலா வரும் காட்சியும் தொடர்ந்து மகேஸ்வர பூசையும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
பிற்பகல் 3.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி  3.15  மணிக்கு கோண்டாவில் ஸ்ரீ  ஞான வைரவர் ஆலயத்தில் வேட்டைதிருவிழா இடம்பெற்றது. அதனை தொடர்ந்து அம்பாள் தெரு வீதி ஊடாக உலா வருகை தந்து ஆலயத்தை வந்தடைந்தாள் அதனை தொடர்ந்து அம்பாளுக்கு பிராயசித்த அபிசேகம் இடம் பெற்றது.



















மாலை 6.00 மணிக்கு சாயரட்சைப் பூசை, 6.30 மணிக்கு ஸ்தம்ப பூசை, மாலை 7.00 மணிக்கு வசந்தமண்டப பூசை   இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அம்பாள் மின் ஒளிகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சப்பறத்தில்  வீதி உலா வரும் காட்சியும் இடம்பெற்றது

























கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் - பத்தாம் திருவிழா (வேட்டைத்திருவிழா)