கோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழாவின் 11ம் நாள் உற்சவம் காலை 8.30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகியது தொடர்ந்து 9.30 மணிக்கு மூலஸ்தான பூசை , 10.00 மணிக்கு ஸ்தம்ப பூசை, 10.30 மணிக்கு வசந்தமண்டப பூசை,11.30 மணிக்கு அம்பாள் சித்திரத்தேரில் வீதி உலா வரும் காட்சியும் இடம்பெற்றது.
மாலை 6.00 மணிக்கு சாயரட்சைப் பூசை, 6.30 மணிக்கு ஸ்தம்ப பூசை, மாலை 7.00 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இரவு 8.00 மணிக்கு அம்பாள் வீதி உலா வரும் காட்சியும் இடம்பெற்றது.