கோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழாவின் 9ம் நாள் உற்சவம் காலை 8.30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகியது தொடர்ந்து 9.30 மணிக்கு மூலஸ்தான பூசை , 10.00 மணிக்கு ஸ்தம்ப பூசை, 10.30 மணிக்கு வசந்தமண்டப பூசை,11.30 மணிக்கு அம்பாள் வீதி உலா வரும் காட்சியும் தொடர்ந்து மகேஸ்வர பூசையும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
மாலை 5.00 மணிக்கு சாயரட்சைப் பூசை, 5.30 மணிக்கு ஸ்தம்ப பூசை, மாலை 7.00 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அம்பாள் வீதி உலா வரும் காட்சியும் இடம்பெற்றது