"தில்லையம்பதியாளே" போற்றி இறுவெட்டு வெளியீட்டு விழா 03.02.2015 செவ்வாய்கிழமை தைப்பூச தினமான இன்று முற்பகல் 10.00 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆசியுரையை எமது ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ நா.திவாகரக்குருக்கள் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து வாழ்த்துரையை யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் சமூகவியல் துறைத்தலைவருமான பேராசிரியர் என்.சண்முகலிங்கன் அவரகள் வழங்கினார். தொடர்ந்து இறுவெட்டு வெளியீட்டு விழா இடம்பெற்றது. தொடர்ந்து கலைஞர்கள் கெளரவிப்பும் இடம்பெற்றது. தொடர்ந்து மதிப்பீடுரையினை பிரம்ம ஸ்ரீ குமாரசுவாமிநாதசர்மா(கவிஞர் வீரா) அவர்கள் வழங்கினார். தொடர்ந்து நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது..