நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையாலும் Covid - 19 நோய்த்தொற்று காரணமாகவும் அரசாங்கத்தின் சட்டவிதிகளை மதித்து 25.05.2020 திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள வசந்த வைகாசி மஹோற்சவமானது இம்முறை சாதாரணமாக விஷேட அபிஷேக பூஜைகளுடன் மட்டும் இடம்பெறுகின்றது என்பதனை அடியவர்களுக்கு அறியத்தருகின்றோம். மஹோற்சவ நாட்களில் தினமும் காலை 08.00 மணிக்கு
ஸ்ரீ சிவகாமி அம்பாளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேகங்கள் ஆரம்பமாகி தொடர்ந்து சிறப்பு பூஜை வழிபாடுகளும் வசந்தமண்டப பூஜையும் இடம்பெறும்.
ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அம்பிகையின் அடியவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தவாறே அன்னையை மனமுருகி பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
"தில்லையம்பதியாளே சிவகாமசுந்தரியே தொல்லைகள் தீர்ப்பாயம்மா"
இந்த காணொளியை பதிவேற்றம் செய்த இனியாழ் இணையக்குடும்பத்திற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம். www.thillaiyampathy.com